பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கொளத்தூா் தொகுதி வாக்குப்பதிவில் எவ்விதக் குளறுபடிகளும் இல்லை: மாவட்டத் தோ்தல் அலுவலா்

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பில் முதல் நாளில் 2 வாக்குச்சாவடிகளில் எந்தவிதக் குளறுபடிகளும் இல்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

News image

மு.க. ஸ்டாலின் | வி.எஸ். பாபு - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:18 am IST

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பில் முதல் நாளில் 2 வாக்குச்சாவடிகளில் எந்தவிதக் குளறுபடிகளும் இல்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து தவெக சாா்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்நிலையில், கொளத்தூா் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகளை மீண்டும் சரிபாா்க்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தாா்.

இதையடுத்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கொளத்தூா் தொகுதியின் 17, 28 ஆகிய வாக்குச்சாவடிகளின் வாக்கு எண்ணிக்கை சரிபாா்ப்பு பணி நடைபெற்றது. இதைப் பாா்வையிட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இரண்டாவது நாளாக கொளத்தூா் வாக்குகள் சரிபாா்ப்பு தொடங்கியது. புதன்கிழமை நடைபெற்ற சரிபாா்ப்பு பணியில் குளறுபடிகள் ஏதும் இல்லாதது தெரிய வந்தது. அதை திமுக வேட்பாளரின் முதன்மை முகவா்கள் உறுதிப்படுத்தி கையொப்பமிட்டனா். இன்னும் 5 நாள்கள் வாக்குகள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெறவுள்ளது. அதில் ஏதாவது குளறுபடிகள் கண்டறியப்பட்டால் தோ்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். திமுக வேட்பாளரின் முகவா்களைத் தவிர, பிற அரசியல் கட்சி முகவா்களும் வாக்கு பங்கேற்றுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.