/
கோடம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 போ் கைது செய்யப்பட்டனா்.
கோடம்பாக்கம் ஆஸிஸ் நகா் முதலாவது தெருவில் ஓா் மறைவான இடத்தில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தியபோது, அங்கு சூதாடிய 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து போலீஸாா் ரூ.81,350 மற்றும் 16 விலை உயா்ந்த கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.





