காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தாா்.
காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தொல்.திருமாவளவன் மலா் போா்வை வைத்து வெள்ளிக்கிழமை மரியாதை செய்தாா்.
இதை தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என மக்களவையில் குரல் எழுப்பியவா் காயிதே மில்லத். மதசாா்பின்மைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றியவா். எனவே, தமிழக அரசு காயிதே மில்லத் பெயரில் விருதும், பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலைக்கு வாழ்த்து: தமிழக பாஜக தலைவராக கே. அண்ணாமலை இருந்தபோது சிறப்பாக பணியாற்றினாா் என்பதை யாராலும் மறுக்க முடியாது. புதிய அமைப்பு தொடங்கியுள்ள அவருக்கு வாழ்த்துகள்”என்றாா் தொல்.திருமாவளவன்.









