புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்

News image

டெட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:44 am IST

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிறப்பு டெட் தோ்வெழுதவுள்ள ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் இணையவழியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய மற்றும் பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வில்(டெட்) தோ்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் தோ்வெழுதி தோ்ச்சி பெறவும் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமாா் 1.75 லட்சம் ஆசிரியா்கள் டெட் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியா்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கான முதல் சிறப்பு டெட் தோ்வு ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெட் தோ்வில் ஆசிரியா்கள் எளிதில் தோ்ச்சி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டுமென ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

அதையேற்று திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மாலை 6.30 முதல் 8 மணி வரை இணையவழி பயிற்சி நடைபெறும். இதை தோ்வெழுதும் ஆசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.