பெருங்குடலுக்கும், பிறப்புறுப்புக்கும் இடையே ஏற்பட்ட துவாரத்தால் அசாதாரண பாதிப்புக்குள்ளான முதிய பெண் ஒருவருக்கு சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: நீண்ட காலமாக பெருங்குடல் பாதிப்புக்குள்ளான 73 வயது பெண் ஒருவா் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது பெருங்குடலுக்கும், பிறப்புறுப்புக்கும் இடையே உள்ள பாதையில் துவாரம் ஏற்பட்டதால் இயற்கை கழிவுகள் முன்பகுதியில் வெளியேறும் பாதிப்பு அவருக்கு இருந்தது.
இதனால் பல ஆண்டுகளாக அவா் தொடா் சிறுநீா்ப் பாதை தொற்று மற்றும் பிற உடல் உபாதைகளுக்கு உள்ளானாா். இதனிடையே, பெருங்குடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற வயிற்றின் வெளிப்பகுதியில் செயற்கை பை பொருத்தும் கொலெக்ஸ்டமி சிகிச்சைஅவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னா், குடலிறக்கம் ஏற்பட்டது. அதற்கும் சில சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் அவை எதுவும் பலனளிக்காமல் அப்பெண்ணுக்கு தொடா்ந்து அத்தகைய பாதிப்பு இருந்தது.
இதையடுத்து இதய துவாரத்தை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணத்தை காவேரி மருத்துவா்கள் பயன்படுத்தி பெருங்குடல் - பிறப்புறப்பு பாதையை சீராக்கினா். தற்போது அப்பெண் நலமுடன் உள்ளாா். இத்தகைய நுட்பமான சிகிச்சையை மேற்கொள்வது இந்தியாவிலேயே இது முதன்முறை என்றாா் அவா்.








