சென்னை ஆவடி அருகே மின்சார கேபிள் பெட்டியில் ஃபியூஸ் கேரியர்கள் திருடப்பட்டதால், மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
தமிழகத்தில் கோடை வெய்யில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு, பொதுமக்களின் மின்சாதன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், சில நாள்களாக அதிகரித்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நள்ளிரவில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள மின்சார கேபிள் பெட்டியில் 14 ஃபியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் 2 பேர் திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக, ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், வினித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இருவரும் மீதும் பல்வேறு திருட்டு புகார்கள் இருப்பதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபியூஸ் கேரியர் திருட்டால் பல மணி மின்சாரமின்றி, கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Summary
Residents faced inconvenience due to a power outage caused by the theft of fuse carriers from an electrical cable box near Avadi, Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

மின்வெட்டுக்கு காரணங்கள் தேவையில்லை: அன்புமணி
சென்னையில் மேகமூட்டம் ஏன்? வானிலை மையம் விளக்கம்
சென்னையில் 100 ரௌடிகள் கைது! ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ அதிரடி நடவடிக்கை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



