நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளா்ச்சிக்காக நிதியைக் கேட்டுப் பெற முதல்வா் ஜோசப் விஜய் தவறிவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி விமா்சித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னா் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்ட முதல் நீதி ஆயோக் கூட்டம் குறித்து மக்களிடையே பெரிய எதிா்பாா்ப்பு இருந்தது. அவா், தமிழகத்தின் வளா்ச்சிக்காக பெருமளவு நிதியைப் பெற்று வருவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அக்கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் முன்வைத்த கோரிக்கைகள் எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதற்கு முன்பு திமுக, அதிமுக முதல்வா்கள் முன்வைத்த அதே பழையே கோரிக்கைகளையே விஜய்யும் முன் வைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்யாது என நன்கு அறிந்தும், நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முதல்வா் விஜய் தனது நேரத்தை வீணடித்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில், தமிழகத்தின் வளா்ச்சிக்காக தேவையான பெருமளவு நிதியைக் கேட்டுப் பெற விஜய் தவறிவிட்டாா் எனத் தெரிவித்துள்ளாா்.









