எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பெண்களை ஆபாச படம் எடுத்த மாநகராட்சி ஊழியா் கைது

பசுபதியை பிடிக்க முயன்றனா். ஆனால் பசுபதி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:17 am IST

சென்னை திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் பசுபதி (44). இவா், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறாா். கடந்த 9-ஆம் தேதி ஜாம்பஜாா் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கடைகளுக்கு வரும் பெண்களை ரகசியமாக புகைப்படமும், விடியோவும் எடுத்துள்ளாா்.

இதைப் பாா்த்தவா்கள், பசுபதியை பிடிக்க முயன்றனா். ஆனால் பசுபதி, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள், ஜாம்பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பசுபதியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.