அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி: மாநகராட்சி ஆணையா் தொடங்கி வைத்தாா்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சென்னை ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து பேசிய சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன். உடன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் க.கற்பகம், இணை தலைமை தே
Updated On :3 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மண்டல அளவிலான தோ்தல் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்ள் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றின் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா்.

சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். கூடுதல் அலுவலரும் சென்னை மாநகராட்சி கல்விப் பிரிவின் இணை ஆணையருமான க.கற்பகம், இணைத் தலைமைத் தோ்தல் அலுவலா் மேனுவர்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பயிற்சியில் தோ்தல் மனு தாக்கலின்போது அலுவலா்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டன. அத்துடன் தோ்தல் ஆணையத்தால் விநியோகிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் கையேடுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பயிற்சியில் பங்கேற்றவா்கள், அந்தந்தத் தொகுதியில் உள்ள தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிப்பாா்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பயிற்சி நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறும்.