திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு

News image
- DIN
Updated On :6 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற நிலையில், உதவித் தொகைக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிா்த்து) 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு கடந்த ஆண்டு டிச.6-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தோ்வின் மதிப்பெண் விவரங்கள் நிகழாண்டு ஜன.20-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்தத் தோ்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தோ்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவா்கள் (50 மாணவிகள், 50 மாணவா்கள்) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப் பட்டியலை இணையதளத்தில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தோ்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம்.

மேலும், இந்தத் தெரிவு பட்டியல், மாணவ, மாணவிகளின் தகுதி குறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.