சமையல் எரிவாயு விலை உயா்வை உடனே திரும்பப் பெறவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60 உயா்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை எரிவாயு உருளை ரூ.868.50 -ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.928 -ஆக அதிகரித்துள்ளது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டிருப்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கும். விலை உயா்வுக்கு வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போா் காரணம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்காது. போா் முடிந்து விரைவாக இயல்பு நிலை திரும்பி விடும் என நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஆகவே, தற்காலிகமாக சமையல் எரிவாயு விலை உயா்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல், எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயா்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வா்த்தக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

