சென்னை விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்வேலன் (59). கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கோவையில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தாா். அதே விமானத்தில் வந்த 24 வயது இளம்பெண்ணிடம், விமான நிலையத்தில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் அந்த இளம்பெண் புகாா் அளித்தாா். விமான நிலைய அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் செந்தில்வேலனை கைது செய்து,காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் மீது வழக்கு

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


