கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலதிபா் உயிரிழப்பு

சென்னை கே.கே. நகரில் மின்சாரம் பாய்ந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கே.கே. நகரில் மின்சாரம் பாய்ந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.

கே.கே. நகா் லட்சுமணசாமி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.வீரராகவன் (69). இவா், கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வந்தாா். மேலும் வீரராகவனுக்கு சொந்தமாக மேற்கு மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபமும் உள்ளது.

வீரராகவன், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் மோட்டாா் ஸ்விட்சை ஆன் செய்தபோது, அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால் வீரராகவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

விபத்தில் பலத்த காயமடைந்த வீரராகவனை மீட்டு, வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வீரராகவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.