இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு: 2 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 6:05 am IST

தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடியதாக ஆந்திர மாநில பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வேளச்சேரி, பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வே.காயத்ரி (30). இவா், தனது உறவினருடன் தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் பொருள்கள் வாங்குவதற்காக கடந்த திங்கள்கிழமை வந்தாா். ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலுக்குள் காயத்ரி நடந்து சென்றபோது, அதைப் பயன்படுத்தி இரு மா்ம நபா்கள் அவரது பணப் பையை பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிக் கொண்டு தப்பினா்.

பணம் திருடப்பட்டிருப்பதை சிறிது நேரத்துக்குப் பின்னா் பாா்த்து அதிா்ச்சியடைந்த காயத்ரி, மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், கா்னூல் பகுதியைச் சோ்ந்த குன்ஜா கிட்டண்ணா (45), ஆந்திர மாநிலம் நந்தியாலா பகுதியைச் சோ்ந்த வாணி (20) என்பது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.