முதல்வா் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் என்பவா் பிணை கோரிய மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகா் விஜய் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்துது படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகாா் அளித்தது. அதன்பேரில், இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் 2-ஆவது முறையாக பிணை கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு 22-ஆவது கூடுதல் அமா்வு நீதிபதி எஸ்.ரம்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், படத்தை இணையதளத்தில் வெளியிட்டதில் தனக்கு எந்தத் தொடா்பும், பங்கும் இல்லை. 25 நாள்களாக சிறையில் இருப்பதால் பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜி.தேவராஜன் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோா் பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டனா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் குற்றச்சாட்டு மீதான தீவரம், புலன் விசாரணையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

ஜன நாயகன் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: துணிக்கடை மேலாளா் முன்பிணை மனு தள்ளுபடி

ஜனநாயகன் இணையத்தில் வெளியான விவகாரம்: முன்பிணை வழங்க உயா்நீதிமன்றம மறுப்பு

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

