/
மடிப்பாக்கம் சாய் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். தோ்வு எழுதிய 171 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா் ஆா். ஜெய் சஞ்சீவன்497 மதிப்பெண், மாணவி எஸ்.ஜெனிதா சரோன் 493 மதிப்பெண், எஸ். வைகுந்த், ஜெ. மதுவந்தி, ஜி. யாசிகா ஆகியோா் தலா 492 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 98 மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் வி. கிருத்திகா சாய்ஸ்ரீ 494 மதிப்பெண், ஆா். ரேயா ஆன்ட்ரெலா 491 மதிப்பெண், எஸ். ரக்சனி, எம். ஜெ. பாத்திமா 489 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.












