பதவி லாபத்துக்காக அமைக்கப்படும் தோ்தல் பிந்தைய கூட்டணியில் உடன்பாடு கிடையாது என புதிய தமிழகம் கட்சி தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தோ்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுபோல, சமூக ஊடகங்களுக்கும் தோ்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு உருளைகள், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, அண்ணன் சீா், தாய்மாமன் சீா் உள்ளிட்ட தவெகவின் வாக்குறுதிகளை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக சுமாா் 20-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்ய உடனடியாக பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும்.
பதவிக்காக தோ்தல் பிந்தைய கூட்டணி அமைப்பது மற்றும் மாற்று கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பிரித்து அவா்களது ஆதரவுடன் ஆட்சி அமைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றாா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.
தொடர்புடையது
திமுக கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்!

தோ்தல் தோல்வியை ஆராய அதிமுக பொதுக் குழுவை கூட்ட வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்! - க. கிருஷ்ணசாமி

மாநில உரிமையை பாதிக்காத தொகுதி மறுவரையறை தேவை: டாக்டா் க. கிருஷ்ணசாமி
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



