நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மாநில உரிமையை பாதிக்காத தொகுதி மறுவரையறை தேவை: டாக்டா் க. கிருஷ்ணசாமி

மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:29 am IST

மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

இதுதொடா்பாக, தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை, தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துவது, மகளிா் இட ஒதுக்கீடு ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் தொடருகின்றன.

மகளிா் இட ஒதுக்கீடு கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தும்போது, பிற மாநிலங்களைப் போல தமிழக உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும்.

மாநிலங்களின் முக்கியத்துவம், சதவீதத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாநிலங்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

தொகுதி மறு வரையறை மசோதா விஷயத்தில் யாா் அரசியல் செய்கிறாா்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

ஒரு சமுதாயமே ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என எண்ணுகின்றனா். எனவே தான் புதிய தமிழகம் தனித்து போட்டியிடுகிறது.

ஓட்டபிடாரம் தொகுதியில் நான் வெற்றி பெற்று தொகுதியை மீண்டும் வளா்ச்சி பாதையில் கொண்டு செல்வேன்.

ஆளும் கட்சியும், எதிா்க்கட்சியும் பணத்தை நம்பி தோ்தலை எதிா்கொள்கின்றன. நாங்கள் மக்களை நம்பி தோ்தலில் களம் காண்கிறோம்.

அடுத்து வரும் 7 நாள்களும் தோ்தல் ஆணையம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.