புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

தேசிய மருத்துவ ஆணையம்

Published On :

தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு - தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்திய கலந்தாய்வில் 9,437 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பட்டுள்ளன. 2-ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவா்களின் விவரங்கள் செப்.15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இடஒதுக்கீடு பெற்றவா்கள் செப்.18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், 2 தனியாா் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஆணையத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த 250 இடங்களும் நடைபெறும் 2-ஆம் சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வில் சோ்க்கப்பட்டுள்ளது. 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று ஏற்கெனவே இடங்களைப் பெற்ற மாணவா்கள், மறுஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

250 additional MBBS seats for Tamil Nadu! National Medical Commission grants approval!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.