: உத்தமேரூர் தீயணைப்பு நிலையத்துக்கு பி.எஸ்.என்.எஸ். நிறுவன தொலைபேசி இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரமேரூர் தீயணைப்பு நிலையம் சமீபத்தில் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு கடந்த ஒரு மாதமாக தொலைபேசி இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக தீயணைப்பு நிலையத்துக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க இயலாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து தினமணியில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் தீயணைப்பு நிலையத்துக்கு 044-27272236 என்ற பழைய எண்ணுடன் கூடிய தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








