சங்கரா பல்கலைக்கழகம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை ஆசி வழங்கினார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகம் சார்பில், மாநில அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டன. இதில், இறுதிப்போட்டியில் சங்கரா பல்கலைக்கழக அணியும், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக அணியும் மோதின. போட்டியில், வெற்றி பெற்ற வீரர்கள் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து, மாநில அளவில் கிரிக்கெட், கைப் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பரதநாட்டிய போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி காவ்யா ஆகியோருக்கு அருளாசி வழங்கினார். அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் விஷ்ணு போத்தி, பதிவாளர் சீனிவாசு, முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், டீன்கள் ரமணகுமார், பாலாஜி, ஸ்ரீராம், கலைத்துறை இயக்குநர் வெங்கட்ராமன், உடற்கல்வித் துறை இயக்குநர் குணாளன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் விஜய் அறிவிப்பு

பெண்கள் முழுத் திறனை வெளிப்படுத்த உகந்த சூழல்: பிரதமா் மோடி பெருமிதம்

பள்ளி அருகே போதைப் பொருள் விற்பனை: உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?






