தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கரசங்கால் பகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, இத்திட்டத்தின் மூலம் பொது இடங்கûளை தூய்மைப்படுத்தும் பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குன்றத்தூர் ஒன்றியம், கரசங்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்று வந்த தூய்மை இந்தியா திட்டப் பணியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு, சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றி எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அதே பகுதியில் உள்ள அரசு நாற்றங்கால் பண்ணையையும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளையும் பார்வையிட்டார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர்கள் அடைக்கலமேரி, முரளி, செந்தில்நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - ரிஷபம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
