தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை கோரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஜனநாய மாதர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் புதன்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் வட்டக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை பேரணியாக வந்து படப்பை பகுதியில் உள்ள குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும், வேலைக்கான சட்டக் கூலி ரூ. 224-ஐ சரியாக வழங்க வேண்டும், ஏற்கெனவே செய்த பணிக்கான ஊதியத்தை உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு வழங்கினர். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தியும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு





