உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: காங்கிரஸார் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிராஸார் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

News image

ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்திய இந்திரா பேரவையினர்.

Updated On :21 ஆகஸ்ட் 2018, 2:04 am IST


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிராஸார் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-ஆவது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமநீராளன், சுகுமாரன், லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அன்னை இந்திரா பேரவை: அதேபோல், அன்னை இந்திரா பேரவை சார்பில் அதன் மாநிலத் தலைவர் உசேன், சாலவாக்கத்தில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், திரளானோர் கலந்துகொண்டு தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். 
செங்கல்பட்டில்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, செங்கல்பட்டு நகரில் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு திங்கள்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 
செங்கல்பட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா, நகர பொறுப்பாளர் ஜே.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 
மாவட்ட நிர்வாகி டி.ஜெயராமன், முன்னாள் நகரமன்ற உறுப்பினரும் முன்னாள் நகர தலைவருமான முருகன், சிறுபான்மைப் பிரிவு ரியாஸ் பாய், சின்னக்கடை ராஜேந்திரன், அசோக்குமார், பவளவண்ணன், வெங்கட்ராமன், சிவாஜி சீனு, பாண்டியன், கோட்டி உள்ளிட்டோர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்றனர். ராட்டினங்கிணறு அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.