/

ரஜினி மக்கள் மன்றம்: காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

ரஜினி மக்கள் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார் அதன் தலைவர் ரஜினிகாந்த். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 10:59 pm

DIN

ரஜினி மக்கள் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார் அதன் தலைவர் ரஜினிகாந்த். 
அரசியல் கட்சி தொடங்குவது என முடிவெடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்காக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.
தூத்துக்குடியில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 
ஒன்றியம், நகராட்சி என அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு நடந்து வருகின்றது. 
சென்னையில் வியாழக்கிமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான பல்வேறு நிலைகளில் நிர்வாகிகளை அறிவித்தார் ரஜினி. இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம், அச்சிறுப்பாக்கம், திருப்போரூர், சித்தாமூர், மதுராந்தகம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய, நகர அமைப்புகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.