இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம்

News image
Updated On :5 ஜூன் 2018, 9:14 pm

DIN

காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமனம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் வட்டக்குழு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் வட்டக்கிளை அரசு ஊழியர் சங்கத் தலைவர் மருதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டப் பொருளாளர் வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.