காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கல்லூரியில் தீப விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தீப விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜூன் 2018, 4:15 am IST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தீப விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் மருத்துவர் இ.ஸ்ரீலேகா செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் நா.கோகிலாவாணி வரவேற்றார். இதில், செவிலியர் சேவையை செவ்வனே ஆற்றவும், வருங்காலத்தில் செவிலியர்களுக்கான பங்கு, அவர்களின் நற்பண்புகள், சேவை மனப்பான்மை, செவிலியத்தின் மீதுள்ள ஆர்வம், ஆகியவை குறித்து, மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. 
கல்லூரி தாளாளர் மருத்துவர் இ.ஸ்ரீலேகா செந்தில்குமார், கல்லூரி முதல்வர் நா.கோகிலாவாணி ஆகியோர் தீபம் ஏற்றி மாணவ, மாணவிகளுக்கு உறுதிமொழியை செய்து வைத்தனர். விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியை எஸ் .ஷகிலா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.