ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் கொள்ளை

மாதவரம் அருகே கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 10:46 pm

மாதவரம் அருகே கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் (54). இவர், ஊவர் மாதவரம் அருகே பழைய அலுமினியம், காப்பர் ஆகியவற்றை உருக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரிடம் வியாசர்பாடி முல்லைநகர் 16-ஆவது தெருவைச் சேர்ந்தவர் அருண் (27) கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாதவரத்தைச் சேர்ந்த புக்ராஜிடம் பழைய காப்பர் வாங்கியதற்காக ரூ. 4 லட்சம் வழங்குவதற்காக புதன்கிழமை அருண் சென்னையில் இருந்து மாதவரத்துக்கு காரில் சென்று 
கொண்டிருந்தார்.
பொன்னியம்மன்மேடு ஜிஎன்டி சாலை அருகே வந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரை வழிமறித்து அருணை தாக்கியுள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 4 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.