மாதவரம் அருகே கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் (54). இவர், ஊவர் மாதவரம் அருகே பழைய அலுமினியம், காப்பர் ஆகியவற்றை உருக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரிடம் வியாசர்பாடி முல்லைநகர் 16-ஆவது தெருவைச் சேர்ந்தவர் அருண் (27) கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாதவரத்தைச் சேர்ந்த புக்ராஜிடம் பழைய காப்பர் வாங்கியதற்காக ரூ. 4 லட்சம் வழங்குவதற்காக புதன்கிழமை அருண் சென்னையில் இருந்து மாதவரத்துக்கு காரில் சென்று
கொண்டிருந்தார்.
பொன்னியம்மன்மேடு ஜிஎன்டி சாலை அருகே வந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரை வழிமறித்து அருணை தாக்கியுள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 4 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலில் நிஜரூப தரிசனம்!

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

