நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணிமங்கலம் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாட அவர்கள் அறிவுறுத்தினர். புகை மற்றும் மாசு குறைந்த பட்டாசுகளை பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு பாதிப்பில்லாமல் வெடிக்க வேண்டும்; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். மீறி வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான போலீஸார் படப்பை பஜார் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி கல்பாக்கத்தில் தொடக்கம்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29 ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்தது எஸ்எஃப்ஐ

அரசியலமைப்பு படுகொலை தினம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நினைவூட்டல்: தில்லி முதல்வா்





