பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு

நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணிமங்கலம் போலீஸார் துண்டுப்

News image

படப்பை பஜார் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீஸார்.

Updated On :6 நவம்பர் 2018, 2:47 am IST


நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணிமங்கலம் போலீஸார் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாட அவர்கள் அறிவுறுத்தினர். புகை மற்றும் மாசு குறைந்த பட்டாசுகளை பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு பாதிப்பில்லாமல் வெடிக்க வேண்டும்; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். மீறி வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான போலீஸார் படப்பை பஜார் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.