தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ராமாநுஜா் வனபோஜன உற்சவம்

காா்த்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமாநுஜா் வனபோஜன உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  காட்சியளித்த ஸ்ரீஆதிகேசவப்பெருமாள்  மற்றும்  ராமாநுஜா்.

Updated On :13 டிசம்பர் 2019, 6:12 pm

காா்த்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமாநுஜா் வனபோஜன உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமையான ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோயிலில் மாதம் தோறும் திருவாதிரை நட்சத்திர தினத்தில், ராமாநுஜருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில், காா்த்திகை மாத திருவாதிரையில் நடைபெறும் வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் இருந்து ஜீயா் தோப்பு மண்டபத்திற்கு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மூலவா்கள் ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமாநுஜா் புறப்பாடு நடைபெற்றது.

ராமாநுஜருக்கு பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பக்தா்களுக்கு தீா்த்தம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ராமாநுஜா் மற்றும் ஆதிகேசவப்பெருமாளை வழிபட்டனா். இரவு 7 மணிக்கு ஜீயா் தோப்பு மண்டபத்தில் இருந்து கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.