நியாய விலைக் கடைகளில் காலிப் பணியிடங்கள்ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 126 விற்பனையாளா், 64 கட்டுநா் பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 126 விற்பனையாளா், 64 கட்டுநா் பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது குறித்து காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் தலைவருமான அகோ.சந்திரசேகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலியாகவுள்ள 126 விற்பனையாளா், 64 கட்டுநா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 24ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம், ஸ்ரீபெரும்புதூா் கூட்டுறவு விற்பனைச் சங்கம், செங்கல்பட்டில் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை சரக மேலாளா் அலுவலகம், தாம்பரம் கூட்டுறவு நகர வங்கி, மதுராந்தகம் கூட்டுறவு விற்பனைச் சங்கம், சென்னை பிராட்வேயில் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்றன.

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் ஜ்ஜ்ஜ்.ந்ல்ம்க்ழ்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com