தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காஞ்சிபுரத்தில் 51 ரௌடிகள் கைது: காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தகவல்

காஞ்சிபுரத்தில் 51 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஜூன் 2020, 8:05 am

காஞ்சிபுரத்தில் 51 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 38 ரௌடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு திருந்தி வாழ எச்சரித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இது தவிர பல்வேறு கொலை கொள்ளை வழிப்பறி போன்ற  குற்ற வழக்குகளில் தொடர்புடைய 13 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 51 கைது செய்யப்பட்டனர்.

இவர்களை தவிர 86 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.