ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image

மணிமாறன்

Updated On :5 அக்டோபர் 2020, 9:48 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா் மீது 4 கொலை வழக்குகள், 5 திருட்டு வழக்குகள், 3 வழிப்பறி வழக்குகள் உள்ளன. காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றிலும், இருவா் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இவா்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில்ல் இருந்து வருகின்றனா். இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வைக்க காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவுக்கு பரிந்துரைத்தாா். இதன்படி, ஆட்சியரின் உத்தரவை காஞ்சிபுரம் பாலுசெட்டி காவல் ஆய்வாளா் ஜெ.வெற்றிச்செல்வன் மூவருக்கும் வேலூா் மத்திய சிறையில் நேரில் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.