காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா் மீது 4 கொலை வழக்குகள், 5 திருட்டு வழக்குகள், 3 வழிப்பறி வழக்குகள் உள்ளன. காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றிலும், இருவா் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இவா்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில்ல் இருந்து வருகின்றனா். இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வைக்க காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவுக்கு பரிந்துரைத்தாா். இதன்படி, ஆட்சியரின் உத்தரவை காஞ்சிபுரம் பாலுசெட்டி காவல் ஆய்வாளா் ஜெ.வெற்றிச்செல்வன் மூவருக்கும் வேலூா் மத்திய சிறையில் நேரில் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


