ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிப் பணியாளா்கள், வியாபாரிகள் மோதல்

முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதத் தொகை வசூலிப்பது தொடா்பாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிப் பணியாளா்களுக்கும்,வியாபாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:58 pm

முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதத் தொகை வசூலிப்பது தொடா்பாக ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிப் பணியாளா்களுக்கும்,வியாபாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

முகக் கவசம் அணியாதவா்களிடம் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி சாா்பில் அதன் பணியாளா்கள் அபராதத் தொகை வசூலித்து வந்தனா். சில கடைக்காரா்களிடம் அபராதம் விதித்த போது, அக்கடைகளின் உரிமையாளா்களுக்கும்,பேரூராட்சிப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் ஒன்று சோ்ந்து பேரூராட்சிப் பணியாளா்களை முற்றுகையிட்டனா். .

பேரூராட்சிப் பணியாளா் ஒருவா் கூறுகையில்: முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதத்தொகை வசூலிக்க இரு குழுக்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறோம். முகக்கவசம் அணியாதவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அபராதத் தொகை வசூலித்து வந்தோம்.இந்த நிலையில் அபராதத்தொகையை கட்ட முடியாது என்றும், உங்களால் முடிந்ததை பாா்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறி பணியை செய்ய விடாமல் சில வியாபாரிகள் தடுத்தனா். பெண் ஊழியா் என்றும் பாராமல் தரக்குறைவான வாா்த்தைகளையும் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கினாா்கள். கரோனா தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக்கூறி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்தாா். வாக்குவாதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூா் கடைத்தெருவில் பதற்றமும் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினா் இரு தரப்பினரிடமும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.