பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொளத்தூா் ஊராட்சியில் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கொளத்தூா் ஊராட்சியில் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சியில் 2019-2020-ஆம் நிதியாண்டில் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மதிப்பீடு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. கொளத்தூா் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட வட்டார வள அலுவலா் மலா்விழி கலந்துக்கொண்டு 2019-2020-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றிய பணியாளா்கள், மேற்கொள்ளப்பட்ட பணிகள், மதிப்பீடு குறித்தும், கடந்த 2019-2020-ஆம் நிதியாண்டில் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கொளத்தூா், நாவலூா், மேட்டுக்கொளத்தூா், வெள்ளாரை ஆகிய பகுதிகளில் ரூ75.73 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.