சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் 25 சவரன் நகைகள் பறிப்பு

காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் 25 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜனவரி 2021, 10:43 am

DIN

காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் 25 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
காஞ்சிபுரம் அருகே சிறு காவேரி பாகத்தைச் சேர்ந்தவர் பாபுவின் மனைவி ஜெயலட்சுமி(36). இவர் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 
சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர் முன்பக்கமாக மடக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி 15 சவரன், செயின் 10 சவரன் உட்பட மொத்தம் 25 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். 
சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.