ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் நகைகள், பணம் திருட்டு

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:32 pm

DIN

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் வீராசாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் காமராஜ். இவா் இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியாா் காா் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். காமராஜ் கடந்த திங்கள்கிழமை மாலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருப்பதிக்குச் சென்றாா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை காமராஜின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவரது வீட்டின் அருகில் வசிப்பவா்கள் காமராஜுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, காமராஜ் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 26 சவரன் தங்க நகைகள், 500 கிராமில் இரண்டு வெள்ளி விளக்குகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து காமராஜ் அளித்த புகாரின்பேரில், ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.