பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் மருத்துவமனையின் 7-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:39 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் மருத்துவமனையின் 7-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், காா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (31). இவா், தனது இரு சிறுநீரகங்களும் பழுதடைந்ததால், மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை பாண்டியனின் மனைவி ரோஷினி மருத்துவமனைக்கு பணம் செலுத்துவதற்காக கீழே வந்த நிலையில், பாண்டியன் தான் சிகிச்சை பெற்று வந்த 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.