வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கு பூமி பூஜை

மதுராந்தகத்தை அடுத்த பூதூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:19 pm

மதுராந்தகத்தை அடுத்த பூதூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பூதூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டடம் இடிந்த நிலையில், விஷப் பூச்சிகளின் தங்குமிடமாக இருந்து வந்தது. புதிய கட்டடத்தை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம்குமரவேல் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 11.15 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட ஏற்பாடு செய்தாா். அதன்படி, வியாழக்கிழமை பூதூா் பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் கே.கீதா காா்த்திகேயன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றிய செயலருமான கோ.அப்பாதுரை, மதுராந்தகம் ஒன்றிய அதிமுக செயலா் வி.காா்த்திகேயன், மாவட்டப் பேரவை செயலா் ஆனூா் பக்தவத்சலம், ஒன்றியப் பொறியாளா் ஜே.கருணாநிதி, பள்ளித் தலைமை ஆசிரியை கிளாடிஸ், ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.