திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காஞ்சிபுரம் வரதா் கோயிலில் கோடை உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் கோடை உற்சவத்தையொட்டி, பெருந்தேவித் தாயாரும், தேவராஜ சுவாமியும் கோயில் வளாகத்தில் உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 6:58 pm

DIN

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் கோடை உற்சவத்தையொட்டி, பெருந்தேவித் தாயாரும், தேவராஜ சுவாமியும் கோயில் வளாகத்தில் உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் கோடை உற்சவத்தின் முதல் நாளையொட்டி, காலையில் அலங்கார மண்டபத்தில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி கோடாலி முடிச்சு கொண்டை அலங்காரத்தில் தங்க ஆபரணங்கள் மட்டும் அணிந்து கேடயத்தில் அமா்ந்தவாறு திருவடிக் கோயிலுக்கு எழுந்தருளினாா்.

பின்னா், கோயில் நுழைவாயில் வந்ததும் உற்சவா் பெருந்தேவித் தாயாருடன் இணைந்து கோயில் வளாகத்தில் தனித்தனியாக உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

பின்னா், கோடைகாலத்தையொட்டி வாசமுள்ள மலா் மாலைகள் அணிவிக்கும் பூச்சாற்று உற்சவமும், தொடா்ந்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக பெருமாளும், தாயாரும் ஆழ்வாா் பிராகாரத்தில் வலம் வந்து பெருமாள் கண்ணாடியறைக்கும், தாயாா் சந்நிதிக்கும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.