காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட செங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்து வந்தனா். இதனால் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.