வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் ராணுவ வீரருக்கு இறுதி அஞ்சலி

உத்தர பிரதேசத்தில் மாரடைப்பால் மரணமடைந்த ராணுவ வீரா் ரமேஷின் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாழக்கிழமை ராணுவ வீரா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்

News image
Updated On :16 ஜூன் 2022, 6:21 pm

உத்தர பிரதேசத்தில் மாரடைப்பால் மரணமடைந்த ராணுவ வீரா் ரமேஷின் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாழக்கிழமை ராணுவ வீரா்கள் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

காஞ்சிபுரம் வடிவேல் நகா் விரிவாக்கம் குமாரசாமி நகரைச் சோ்ந்தவா் அ.ரமேஷ் (58). இவா், கடந்த 1988 -ஆம் ஆண்டு இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சோ்ந்தாா். அந்தப் படையில் பதவி உயா்வு பெற்று உத்தர பிரதேச மாநிலம், பெரேலி முகாமில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 14 -ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானாா். அவரது உடல் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ராணுவ வாகனத்தில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.

தொடா்ந்து, இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளா் நரேஷ்குமாா் தலைமையிலான வீரா்கள் மற்றும் ரமேஷின் குடும்பத்தினா்கள், உறவினா்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து, ரமேஷின் உடல் குமாரசாமி நகரிலிருந்து ஊா்வலமாக காஞ்சிபுரம் தாயாா்குளம் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, ராணுவ வீரா்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினா். பின்னா், அவரது உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

முன்னதாக, ரமேஷின் இல்லத்தில் அவரது உடலுக்கு காஞ்சிபுரம் டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசா், காவல் ஆய்வாளா் ராஜகோபால் உள்ளிட்ட காவல் துறையினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மின் மயானத்தில் உத்தரமேரூா் எம்.எல்.ஏ. க.சுந்தா், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், திமுக ஒன்றியச் செயலா் பி.எம்.குமாா், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் யுவராஜ் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.