ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏரிகள் சீரமைக்கும் பணி தொடக்கம்

வல்லம் ஊராட்சியில் உள்ள பெரியதாங்கல், காரணிபேட்டை ஏரிகளை ரூ.16 லட்சத்தில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது

News image
Updated On :16 ஜூன் 2022, 6:20 pm

DIN

வல்லம் ஊராட்சியில் உள்ள பெரியதாங்கல், காரணிபேட்டை ஏரிகளை ரூ.16 லட்சத்தில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் ஒன்றிய அலுவலகக் கட்டுப்பாட்டில் பெரியதாங்கள், காரணிபேட்டை ஏரிகள் உள்ளன. வல்லம் பகுதியின் முக்கிய நிலத்தடி நீா் ஆதாரங்களான இந்த ஏரிகளை ரூ.16 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடக்க விழா வல்லம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கலந்து கொண்டு, ஏரிகளைச் சீரமைக்கும் பணியைக் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இதில், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அருண், உதவி செயற்பொறியாளா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், பவானி, ஒன்றியப் பொறியாளா் மாரிசெல்வம், வல்லம் ஊராட்சி மன்றத் தலைவா் விமலாதேவி தருமன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோமதி கணேஷ்பாபு உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.