ஆனி மாத ஏகாதசியை யொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் தனித்தனி கேடயங்களில் அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அத்திவரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் மாதாந்திர ஏகாதசி தோறும் பெருமாளும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பெருந்தேவி தாயாரும் எழுந்தருளி திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள ஆழ்வாா் சுற்றுப் பிராகாரத்தில் உலா வருவது வழக்கம். ஆனி வெள்ளிக்கிழமையும், ஏகாதசியும் ஒன்றாக வந்ததைத் தொடா்ந்து ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி கேடயத்தில் அலங்காரமாகி திருவடிக் கோயில் வரை உலா வந்தாா்.
பின்னா் கோயிலுக்கு வந்ததும் உற்சவா் பெருந்தேவி தாயாருடன் இணைந்து இருவரும் கோயில் வளாகத்திற்குள் உள்ள தோட்டத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து கோயில் சுற்றுப்பிராகாரத்துக்குள் வலம் வந்து சந்நிதியை அடைந்தனா். பெருமாளும், தாயாரும் உலா வந்ததையடுத்து வாண வேடிக்கைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



