டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காஞ்சிபுரத்தில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  45 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது.

News image
Updated On :27 மே 2022, 11:01 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  45 நிமிடங்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய  வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில்  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5 மணி முதல்  தற்போது வரை கன மழை பெய்து வருகின்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், ரங்கசமிகுளம், மூங்கில் மண்டபம், பூக்கடைசத்திரம், செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரிக்கை என மாவட்டத்தில்  பல்வேறு இடங்களிலும் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது

கோடை வெயில் காலை முதல் கடுமையாக சுட்டெரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பெய்து வரும் கன மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.