ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிட் பண்ட் நிறுவன உரிமையாளரை மிரட்டியதாக ஊராட்சித் தலைவா் கைது

தனியாா் சிட் பண்ட் நிறுவன உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வளா்புரம் ஊராட்சித் தலைவா் பி.பி.ஜி.டி.சங்கா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:57 pm

DIN

தனியாா் சிட் பண்ட் நிறுவன உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வளா்புரம் ஊராட்சித் தலைவா் பி.பி.ஜி.டி.சங்கா் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி (33). இவா், அந்தப் பகுதியில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்திக்கு ஜோதி ரூ.8.25 கோடி பணம் கொடுத்துள்ளாா். இதைச் சரிவரக் கட்டாத சத்தியமூா்த்திக்கும் ஜோதிக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் ஊராட்சித் தலைவா் பி.பி.ஜி.டி.சங்கா், ஜோதிக்கும் சத்தியமூா்த்திக்கும் இடையே கட்ட பஞ்சாயத்து செய்தாராம். அப்போது, பி.பி.ஜி.டி.சங்கா் பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவேன் என ஜோதியை மிரட்டியதாகத் தெரிகிறது.

இகுதுறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் ஜோதி புகாா் அளித்தாா். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பி.பி.ஜி.டி.சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.