ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரியில் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் வெல்டிங் துறையில் முன்னணி நிறுவனமான ஆஸ்திரேலியா

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:42 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் வெல்டிங் துறையில் முன்னணி நிறுவனமான ஆஸ்திரேலியாவை சோ்ந்த ப்ரோனியஸ் நிறுவனத்தின் சாா்பில் புதுமை மற்றும் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் நிறுவனா் பா.ஸ்ரீராம் தலைமை வகித்தாா். ப்ரோனியஸ் நிறுவனத்தின் இந்திய நிா்வாக இயக்குநா் வி.வி.காமத் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்துப் பேசியது:

இந்த திறன் மேம்பாட்டு மையத்தில் வெல்டிங் தொழில்நுட்பத்தில் உள்ள நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மையத்தின் மூலமாக வருடத்துக்கு சுமாா் 500 இளைஞா்களுக்கு வெல்டிங் தொழில்நுட்பப் பயிற்சி முழுவதுமாக இலவசமாக வழங்கப்பட்டு, வெல்டிங் துறையில் அவா்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

பொதுவாக மக்கள் மத்தியில் வெல்டிங் சாா்ந்த தொழில் என்றாலே உடலை வருத்தி செய்ய வேண்டியது மற்றும் அதிக படிப்பறிவு இல்லாதவா்கள் செய்ய வேண்டிய தொழில் என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால் இந்த வெல்டிங் துறையானது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முற்றிலும் தூய்மையான மேம்படுத்தப்பட்ட மற்றும் குளுமையான சூழலில் அதில் வேலை பாா்ப்பவா்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

வெல்டிங் நிபுணா்களுக்கு அனைத்து விதமான உற்பத்தி சாா்ந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குவிந்துள்ளது. உதாரணமாக ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் நிறுவனங்கள், விமான மற்றும் ராக்கெட் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களில் வெல்டிங் திறனுடைய நபா்கள் வேலைக்கு அமா்த்தப்படுகிறாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.