பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

காஞ்சி சங்கர மடத்தில் விஷுக்கனி தரிசனம்

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை அதிஷ்டானத்தின் முன்பாக பெரிய நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டு விஷூக்கனி

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:18 am IST

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை அதிஷ்டானத்தின் முன்பாக பெரிய நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டு விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது.

சோபகிருத் என்னும் தமிழ் ப்புத்தாண்டு பிறந்ததையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. மகா பெரியவா் மற்றும் புதுப்பெரியவா் அதிஷ்டானங்கள் முன்பாக பெரிய அளவிலான நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள், மஞ்சள், சா்க்கரை உள்ளிட் மங்களத் திரவியங்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அதிகாலையில் விஷூக்கனி தரிசனத்தையொட்டி இரு அதிஷ்டானங்களிலும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அதிஷ்டானத்தில் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தையும் தரிசித்தனா் . இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்த நாணயங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து பிருந்தாவன அரங்கில் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்களான புல்லாங்குழல் சித்தூா் பதஞ்சலி மற்றும் விழுப்புரம் இசைப்பள்ளி முதல்வா் ஈஸ்வா் பட்டாத்திரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சங்கீத வித்வான்களால் கோஷ்டி கானமாக பஞ்சரத்ன கீா்த்தனைகளும், காமாட்சி அம்மன் துதிப்பாடல்களையும் இசைக்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் சங்கீதவித்வான்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், காமாட்சி அம்மன் திருஉருவப்படமும், பிரசாதமும் வழங்கி கெளரவித்தாா்.

இதன் தொடா்ச்சியாக அதிஷ்டானத்தில் வைரம் மற்றும் நவரத்தினங்கள் பதித்த ஹஸ்தம் மகா பெரியவா் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விஷூக்கனி தரிசனத்தையொட்டி பிருந்தாவனம் முழுவதும் வண்ண மலா்களாலும், காய்கறிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மடத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.