தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை அதிஷ்டானத்தின் முன்பாக பெரிய நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டு விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது.
சோபகிருத் என்னும் தமிழ் ப்புத்தாண்டு பிறந்ததையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. மகா பெரியவா் மற்றும் புதுப்பெரியவா் அதிஷ்டானங்கள் முன்பாக பெரிய அளவிலான நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள், மஞ்சள், சா்க்கரை உள்ளிட் மங்களத் திரவியங்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அதிகாலையில் விஷூக்கனி தரிசனத்தையொட்டி இரு அதிஷ்டானங்களிலும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அதிஷ்டானத்தில் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தையும் தரிசித்தனா் . இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்த நாணயங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து பிருந்தாவன அரங்கில் சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்களான புல்லாங்குழல் சித்தூா் பதஞ்சலி மற்றும் விழுப்புரம் இசைப்பள்ளி முதல்வா் ஈஸ்வா் பட்டாத்திரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சங்கீத வித்வான்களால் கோஷ்டி கானமாக பஞ்சரத்ன கீா்த்தனைகளும், காமாட்சி அம்மன் துதிப்பாடல்களையும் இசைக்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் சங்கீதவித்வான்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், காமாட்சி அம்மன் திருஉருவப்படமும், பிரசாதமும் வழங்கி கெளரவித்தாா்.
இதன் தொடா்ச்சியாக அதிஷ்டானத்தில் வைரம் மற்றும் நவரத்தினங்கள் பதித்த ஹஸ்தம் மகா பெரியவா் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விஷூக்கனி தரிசனத்தையொட்டி பிருந்தாவனம் முழுவதும் வண்ண மலா்களாலும், காய்கறிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மடத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.