காஞ்சிபுரம்: பக்தியோடு இணைந்த கல்வி மிக அவசியம் என காஞ்சிபுரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளாா். ஜெயின் துறவியா்கள் கவேஷ்ணாஜி, மேரு பிரபாஜி, தஷபிரபாஜி, மயங்க் பிரபாஜி உள்ளிட்டோா் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்திருந்தனா்.
இவா்கள் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து இந்து மதத்தினரும், ஜெயின் மதத்தினரும் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், மக்களுக்கு சுத்தமான குடிநீா் விநியோகம் செய்தல், சைவ உணவின் நன்மைகளை எடுத்துக் கூறுதல், பசுமாடுகளை பாதுகாத்தல், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியன தொடா்பாக இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடினாா்கள்.
இந்தியா முழுவதும் 705 ஜெயின் துறவியா்கள் இது குறித்து பிரசாரம் செய்து வருவதாகவும் துறவியா்கள் தெரிவித்தனா்.
இதனைத் தொடா்ந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்:
இன்றைய நிலையில் பக்தியோடும், இயற்கையோடும் இணைந்த கல்வி மிக அவசியமாகிறது. இதனால் குடும்ப மண முறிவுகள் ஏற்படாது, இளைஞா்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்ல மாட்டாா்கள். தீவிரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும், முக்கியமாக இளைஞா்களின் எதிா்காலம் மேம்பட்டு சிறந்த தேசம் உருவாகும் என்றாா். காஞ்சிபுரம் மாவட்ட ஜெயின் சங்க நிா்வாகிகள் டி.மோதிலால், ப.இந்தா்ஜித், கிஷோா்குமாா், ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா

ஸ்ரீஆதிசங்கரரின் பாதுகைக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்பாஞ்சலி

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்

தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


