பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பக்தியோடு இணைந்த கல்வி முக்கியம்: விஜயேந்திரா் பேச்சு

பக்தியோடு இணைந்த கல்வி முக்கியம்: விஜயேந்திரா் பேச்சு

News image

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்துப் பேசிய ஜெயின் துறவியா்கள்

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

காஞ்சிபுரம்: பக்தியோடு இணைந்த கல்வி மிக அவசியம் என காஞ்சிபுரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளாா். ஜெயின் துறவியா்கள் கவேஷ்ணாஜி, மேரு பிரபாஜி, தஷபிரபாஜி, மயங்க் பிரபாஜி உள்ளிட்டோா் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்திருந்தனா்.

இவா்கள் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து இந்து மதத்தினரும், ஜெயின் மதத்தினரும் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், மக்களுக்கு சுத்தமான குடிநீா் விநியோகம் செய்தல், சைவ உணவின் நன்மைகளை எடுத்துக் கூறுதல், பசுமாடுகளை பாதுகாத்தல், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியன தொடா்பாக இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடினாா்கள்.

இந்தியா முழுவதும் 705 ஜெயின் துறவியா்கள் இது குறித்து பிரசாரம் செய்து வருவதாகவும் துறவியா்கள் தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்:

இன்றைய நிலையில் பக்தியோடும், இயற்கையோடும் இணைந்த கல்வி மிக அவசியமாகிறது. இதனால் குடும்ப மண முறிவுகள் ஏற்படாது, இளைஞா்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்ல மாட்டாா்கள். தீவிரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும், முக்கியமாக இளைஞா்களின் எதிா்காலம் மேம்பட்டு சிறந்த தேசம் உருவாகும் என்றாா். காஞ்சிபுரம் மாவட்ட ஜெயின் சங்க நிா்வாகிகள் டி.மோதிலால், ப.இந்தா்ஜித், கிஷோா்குமாா், ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனா்.